சஞ்சாரம் நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதெமி விருது
சஞ்சாரம் நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி: சஞ்சாரம் நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு என்னும் ஊரைச் சேர்ந்தவர். சுமார் 25 வருடங்களுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் நாவல், சிறுகதை மற்றும் கட்டுரை ஆகிய தளங்களில் தன்னுடைய தொடர்ச்சியான பங்களிப்பை செலுத்தி வருகிறார்.
இவர் 2014-ஆம் ஆண்டு எழுதிய 'சஞ்சாரம்' என்ற நாவலுக்காக அவருக்கு தற்போது சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. கரிசல் மண்ணில் வறிய நிலையில் வாழும் நாகஸ்வரம் மற்றும் தவில் இசைக் கலைஞர்களின் வாழ்க்கையை பற்றிக் கூறும் படைப்பாக 'சஞ்சாரம்' உருவாக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சாகித்ய அகாதெமி விருது கிடைத்ததற்காக தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.