பொதுத் துறை பணியாளர் வாரிசுகளுக்கு அரசு வேலை
தமிழக அரசின் பொதுத்துறையில் பணியாற்றி காலமான 3 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை முதல்வர் பழனிசாமி அண்மையில் வழங்கினார்.
தமிழக அரசின் பொதுத்துறையில் பணியாற்றி காலமான 3 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை முதல்வர் பழனிசாமி அண்மையில் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
பொதுத்துறையின் கீழ் செயல்படும் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் இருதயராஜ், எம்.கே.ராஜசேகர், ஜே.கிரிஜா ஆகியோர் பணிபுரிந்தனர். பணிக்காலத்தில் அவர்கள் இறந்தனர்.
அவர்களது வாரிசுகளுக்கு அரசு விருந்தினர் இல்லத்தில் தொலைபேசி இயக்குபவருக்கான பணி நியமன உத்தரவுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் வழங்கியதாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.