ஜெயலலிதா மரணம்: ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் ஐ.ஜி. சத்தியமூர்த்தி இருவரும் 28-இல் ஆணையத்தில் ஆஜராக சம்மன்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் ஐ.ஜி. சத்தியமூர்த்தி இருவரும் 28-இல் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் ஐ.ஜி. சத்தியமூர்த்தி இருவரும் 28-இல் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுப்பப்பட்ட சந்தேகங்களின் காரணமாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றது.
இந்த ஆணையமானது அரசு அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் அவரது வீட்டுப் பணியாளர்கள் என பலருக்கும் சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றது.
Advertisement
Advertisement
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆடிட்டரும் 'துக்ளக்' இதழ் ஆசிரியருமான குருமூர்த்தி மற்றும் ஐ.ஜி. சத்தியமூர்த்தி இருவரும் 28-இல் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது உள்ளே செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தியிடமும் விசாரிக்கப்படலாம் என்று தெரிகிறது.
முன்னதாக முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆணையத்தின் முன் ஆஜராகி சாட்சியமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.