அரக்கோணத்தில் ரூ.1.6 கோடியில் வணிக வரி அலுவலகக் கட்டடம்
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ரூ.1.6 கோடியில் வணிக வரி அலுவலகக் கட்டடம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் ரூ.1.6 கோடியில் வணிக வரி அலுவலகக் கட்டடம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் வணிக வரித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி வெளியிட்ட அறிவிப்புகள்: வேலூர் அரக்கோணத்தில் வணிக வரி அலுவலர் அலுவலகம் ரூ.1.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். பட்டுக்கோட்டையில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம் கட்டப்படும். தென்காசியில் புதிய ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ரூ.1.96 கோடியில் ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலகக் கட்டடம் கட்டப்படும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.