ஜூலை 6-இல் பேரவை கூட்டம் இல்லை
ஜூலை 6-ஆம் தேதி பேரவைக் கூட்டத் தொடர் இல்லை என்று அவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.
ஜூலை 6-ஆம் தேதி பேரவைக் கூட்டத் தொடர் இல்லை என்று அவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.
வரும் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் வீட்டு வசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறை, பொதுத்துறை, மாநில சட்டப்பேரவை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்கள்-ஏனைய ஓய்வுக்கால நன்மைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜூலை 6-க்குப் பதிலாக 5-ஆம் தேதி ஒருநாள் மட்டுமே விவாதம் நடைபெறும் எனவும், 6-ஆம் தேதி பேரவைக் கூட்டம் இல்லை எனவும் அவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார். வரும் 9-ஆம் தேதி துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.