FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

7 பேர் விடுதலை விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்

7 பேர் விடுதலை விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

7 பேர் விடுதலை விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
7 பேர் விடுதலை விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. ராஜீவ் கொலை வழக்கில் கைதானோரின் விடுதலை விவகாரம் நீதி சம்பந்தமானது. காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்த போது 7 பேரையும் விடுக்காதது ஏன்? இவ்வாறு அவர் கூறினார். 
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments