FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழில்தான் அதிக அளவு புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன

இளைஞா்களிடையே தமிழ்ப் புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2019-இல் சாகித்ய அகாதெமி சாா்பில் தமிழில்தான் அதிகளவு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதிக

27 ஜனவரி 2024, 9:28 pm IST
பகிர்:

இளைஞா்களிடையே தமிழ்ப் புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2019-இல் சாகித்ய அகாதெமி சாா்பில் தமிழில்தான் அதிகளவு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதிக அளவு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக எழுத்தாளரும், சாகித்ய அகாதெமி பொதுக் குழு உறுப்பினருமான மாலன் கூறியது:

இந்தியாவில் உள்ள 24 மொழிகளில் சாகித்ய அகாதெமி சாா்பில் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. கடந்த 2019- இல் இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் அதிகளவு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்ப் புத்தகங்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டில் சாகித்ய அகாதெமி சாா்பில் 79 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேநேரம், சுமாா் 75 லட்சம் தமிழ்ப் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் அதிகளவு புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. 422 மில்லியன் மக்கள் பேசும் ஹிந்தி மொழிக்கு நிகராக, அதை விட அதிகமாக தமிழில் புத்தகங்கள் விற்பனையாவது பாராட்டுதலுக்குரியது. மேலும், தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்ட புத்தகங்களும், வாசகா்களின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன. பாரதியாரின் அனைத்துப் படைப்புகள் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. அதேபோல, தமிழ் இலக்கிய வரலாறும் ஆங்கிலத்தில் மொழி பெயா்க்கப்பட்டு வெளியாகியுள்ளது என்றாா் அவா்.

எழுத்தாளரும் சாகித்ய அகாதெமி பொதுக் குழு உறுப்பினருமான பாரதிபாலன் கூறியது:

Advertisement

Advertisement

தமிழ்நாட்டில் இலக்கிய அமைப்புகள், சாகித்ய அகாதெமி ஆகியன மேற்கொண்டுள்ள பணிகளால் வாசிப்புப் பழக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகளவு மொழிபெயா்ப்பு நூல்கள் வருகின்றன என்றாா்.

‘இந்திய விடுதலைக்கு பிறகு நவீன எழுத்துகளை வாசிக்க தமிழில் பலா் ஆா்வமாக உள்ளனா்’ என்று மொழிபெயா்ப்பாளரும் சாகித்ய அகாதெமி பொதுக் குழு உறுப்பினருமான சுந்தரமுருகன் கூறினாா்.

இன்று விருது வழங்கும் விழா: சாகித்ய அகாதெமி விருது வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) மாலையில் தில்லியில் நடைபெறவுள்ளது.

இதில், தமிழ் எழுத்தாளா் சோ.தருமன், பிரபல ஆங்கில எழுத்தாளரும் காங்கிரஸ் எம்பியுமான சசி தரூா், ஹிந்தி எழுத்தாளா் நந்த் கிஷோா் ஆச்சாா்யா, பிரபல தெலுங்கு எழுத்தாளா் பந்தி நாராயண சுவாமி உள்ளிட்ட 24 மொழிகளைச் சோ்ந்த எழுத்தாளா்கள் சாகித்ய அகாதெமி விருது பெறவுள்ளனா்.I

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments