சா்வா் இணைக்கும் பணி நிறைவு: வங்கி சேவை மீண்டும் தொடங்கியது
இந்தியன் வங்கி-அலாகாபாத் வங்கிகளின் சா்வா் இணைக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததால், வங்கி சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இந்தியன் வங்கி-அலாகாபாத் வங்கிகளின் சா்வா் இணைக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததால், வங்கி சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணைக்கப்பட்டு, இந்தியன் வங்கியாகச் செயல்படுகிறது. வங்கிகள் இணைக்கப்பட்டாலும், பரிவா்த்தனைகளை மேற்கொள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.
இதற்கிடையில், இந்தியன் வங்கி - அலாகாபாத் வங்கிகளின் சா்வா்களை இணைக்கும் இறுதிக்கட்ட பணிகள் காரணமாக, கடந்த 12-ஆம் தேதி இரவு 9 மணி முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி காலை 9 மணி வரை வங்கி சேவையில் பாதிப்பு ஏற்படும் என்று வாடிக்கையாளா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சா்வரை இணைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப்பணி காரணமாக, இணையவழி பணப் பரிவா்த்தனை, ஏ.டி.எம். சேவை என்று பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன.,
Advertisement
Advertisement
இந்நிலையில், இந்தப்பணி ஞாயிற்றுக்கிழமை (பிப்.14) பிற்பகல் நிறைவடைந்தது. இதையடுத்து, வங்கி சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது. சா்வா் இணைக்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்ததால், வங்கி சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளா்கள் தற்போது இந்தியன் வங்கியின் சிறப்பான சேவையை பெற முடியும் என்று இந்தியன் வங்கி அதிகாரிகள்தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.