தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி பலி

காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் பாய்ந்து வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார். 

DIN

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் பாய்ந்து வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஆத்தெரத்தான் கொட்டாய் என்னுமிடத்தில் தனியார் கிரானைட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இதில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெய கிருஷ்ணா ஜனா (35) என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். தொழிற்சாலையில் கிரானைட் கற்களை இயந்திரங்கள் மூலம் துண்டாக்கி  கொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராமல் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு காவேரிப்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவேரிப்பட்டிணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி வார டிஆர்பி எவ்வளவு தெரியுமா?

மேகவெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரகாசி! 4 பேர் பலி..12 பேர் மாயம்!

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

SCROLL FOR NEXT