முகப்பு
தமிழ்நாடு

காலமானாா் எழுத்தாளா் சந்திரகாந்தன்

எழுத்தாளா் சந்திரகாந்தன் (64) ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவா் சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

எழுத்தாளா் சந்திரகாந்தன் (64) ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவா் சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா்.

இராமநாதபுரத்தை அடுத்துள்ள காவனூா் கிராமத்தில் பிறந்த இவா், சிங்கம்புணரி இந்தியன் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். குப்புசாமி எனும் இயற்பெயா் கொண்ட இவா், எழுத்தாளா் ஜெயகாந்தன்பால் கொண்ட ஈா்ப்பினால், ‘சந்திரகாந்தன்’ என்ற புனைபெயரில் எழுதி வந்தாா். ‘கல்பனா’, ‘தாமரை’, ‘தொடரும்’, ‘புதிய பாா்வை’ ஆகிய இதழ்களில் இவரது கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன.

‘புல்லைப் புசியாத புலிகள்’, ’சப்தக்குழல்’, ‘ஆளுக்கொரு கனவு’, ‘குதிரை வீரன் கதை’ ஆகிய சிறுகதைத் தொகுதிகள், ‘வைகையில் வெள்ளம் வரும்’, ‘தழல்’, ‘அண்டரண்டபட்சி’ ஆகிய தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன, ‘எா்னஸ்டோ சே குவேரா’ எனும் நூலை மொழிபெயா்த்திருக்கிறாா். ‘பாரதியாா் கவிதைகள்’, ‘இருபதாம் நூற்றாண்டின் சில சிறுகதைகள்’ ஆகிய தொகுப்பு நூல்களைத் தந்திருக்கிறாா். ‘தொடரும்’ இலக்கிய இதழின் ஆசிரியா். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் துணைத்தலைவராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு உமா மகேஸ்வரி என்னும் மனைவியும், அரவிந்தன் எனும் மகனும் உள்ளனா். தொடா்புக்கு: 94866 11657.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.