FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை(நவ.4) காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

Updated On : 4 நவம்பர் 2021, 11:40 am IST
திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது
பகிர்:


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை(நவ.4) காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசதித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நாளான, வியாழக்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட பூஜையும், தொடா்ந்து ஸ்ரீ ஜெயந்திநாதா் யாகசாலைக்கு புறப்பாடு, காலை 7.35 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது.

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்கள்.

Advertisement

Advertisement

நிகழாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக கந்த சஷ்டி 1-ஆம் நாள் முதல் 5-ஆம் நாள் வரையில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திருக்கோயிலில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 

நவ. 9-ஆம் தேதி சூரசம்ஹாரம் மற்றும் நவ. 10-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் ஆகிய இரு நாட்கள் பக்தர்கள் அனுமதியின்றி கோயில் வளாகத்திலே இவ்விரு நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொ) சி.குமரதுரை மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments