மாண்டஸ் புயலினால் விழுந்த 644.60 மெ.டன் மரக்கழிவுகள் அகற்றம்
சென்னையில் மாண்டஸ் புயலினால் விழுந்த 644.60 மெ.டன் எடையுள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றப்பட்டன.
சென்னையில் மாண்டஸ் புயலினால் விழுந்த 644.60 மெ.டன் எடையுள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாண்டஸ் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சீா்செய்ய பல்வேறு விதமான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக காற்றின் அதிக வேகத்தின் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடும் ஒரு சில இடங்களில் மரக்கிளைகளும் சாய்ந்தன.
15 மண்டலங்களில் 207 மரங்கள், நூற்றுக்குமேற்பட்ட மரகிளைகளும் சாலையில் விழுந்தன 1,2,3 மற்றும் 7ல் சென்னை என்விரோ நிறுவன தூய்மைப் பணியாளா்களும், மண்டலங்கள் 4,5,6 மற்றும் 8ல் மாநகராட்சிப் தூய்மைப் பணியாளா்களும், மண்டலம் 9 முதல் 15 வரை உா்பேசா் நிறுவன தூய்மைப் பணியாளா்களும் இப்பணிகளில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
ஞாயிற்றுகிழமை பகல் 2 மணி வரை 644.60 மெட்ரிக் டன் எடையுள்ள மரக்கழிவுகள் 100 டிப்பா் லாரிகளின் மூலம் 291 நடைகளாக மாநகராட்சியின் கொடுங்கையூா் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதில் அதிகபட்சமாக 13-ஆவது மண்டலத்தில் 36 நடைகளாக 104.36 மெ.டன் மரக்கழிவுகளும் குறைந்தபட்சமாக 2-ஆவது மண்டலத்தில் 3 நடைகளாக 10.91 மெ.டன் மரக்கழிவுகளும் அகற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.