தேர்தல் வெற்றிக்குப் பிறகு திமுகவில் இணைந்த அதிமுகவினர்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெருமபாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆவடி மாநகராட்சியைச் சேர்ந்த அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெருமபாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆவடி மாநகராட்சியைச் சேர்ந்த அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருவள்ளூர் மத்திய மாவட்டம் அதிமுகவைச் சேர்ந்த ஆவடி மாநகராட்சி கவுன்சிலர் ஜி.ராஜேஷ், 14வது வட்டச் செயலாளர் என்.ஆனந்த்ராஜ் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
படிக்க | சென்னையில் அடியெடுத்து வைத்த பாஜக; முதல் வெற்றி
Advertisement
அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று அவர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., பால்வளத் துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளருமான மு. நாசர் ஆகியோர் உடன் இருந்தனர்.