நீதிபதி ஆறுமுகசாமி 
தமிழ்நாடு

ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 5 மாதங்கள் நீட்டிப்பு!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற  முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஜெயலலிதா சம்மந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடையாததால் ஆணையத்தின் பதவிக் காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், விசாரணை ஆணையத்தின் பதவிக் காலத்தை மேலும் 5 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்றுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில் 12-வது முறையாக ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 ஆண்டுகளுக்குப் பின்.. சீனாவின் ஷாங்காய்க்கு ஏர் இந்தியா நேரடி விமான சேவை!

மத்திய பட்ஜெட் 2026-27: நிர்மலா சீதாராமனின் 83 நிமிட முழு உரை

மத்திய பட்ஜெட் 2026-27: தமிழ்நாட்டிற்கு கிடைத்த திட்டங்கள் என்ன?

மத்திய பட்ஜெட் 2026: தனிநபர் வருமான வரி; இதை கவனித்தீர்களா?

யு19 உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்தியா! பாகிஸ்தானை வெளியேற்றியது!

SCROLL FOR NEXT