முகப்பு
தமிழ்நாடு

கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்றுமுதல் வழிபாட்டுத் தலங்களில் அனுமதி

தமிழகத்தில் வார இறுதி நாள்களுக்கான தடை நீக்கப்பட்டதையடுத்து இன்று காலை முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி 2022, 8:12 am IST
இன்றுமுதல் வழிபாட்டுத் தலங்களில் அனுமதி
பகிர்:

தமிழகத்தில் வார இறுதி நாள்களுக்கான தடை நீக்கப்பட்டதையடுத்து இன்று காலை முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

முன்னதாக கரோனா பரவல் காரணமாக வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில், நேற்று தமிழக அரசு வெளியிட்ட தளர்வுகளில், வழிபாட்டுத் தலங்களுக்கான தடையை நீக்கி உத்தரவிடப்பட்டது.

அதேசமயம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க இந்துசமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.