தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி: பரிசு ரூ. 1 லட்சம்

DIN

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் மற்றும் லிங்கன் தொழில் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் (சார்ஜா, ஐக்கிய அரபு அமீரகம்) இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகிறது. 

இதுபற்றி சென்னையிலுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் இந்தியக் கிளை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

'அறியப்படாத செய்திகள்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்கள், தங்கள் ஊரில், நகரில் பிடித்த, ரசித்த, நடந்த நிகழ்வுகள், செய்திகள், உலகறியா ஆளுமைகள் குறித்துக் கட்டுரைகள் எழுதி அனுப்பலாம்.  

இதற்கென நுழைவுக்கட்டணம் எதுவும் இல்லை. போட்டிகளுக்கான கட்டுரைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும், 1000 சொற்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 

தாங்கள் எழுதிய கட்டுரைகளை studentstamilconf2023@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு வருகிற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

கல்லூரி, பல்கலைக்கழக, பல்தொழில்நுட்ப கல்லூரி, ஆய்வு நிறுவன மாணவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். 

கட்டுரைப் போட்டிக்கான முடிவுகள் 31.03.2023 அன்று மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும் எனவும் போட்டிக்கான பரிசுத்தொகை ரூ. 1 லட்சம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT