FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி பலியான மூவர் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியான மூவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Updated On : 20 ஜூலை 2022, 6:28 pm IST
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியான மூவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மணிலா வயலில் மின் வேலி அமைத்தபோது மின்சாரம் பாயந்ததில் 3 போ் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.

திண்டிவனம் அருகே உள்ள வன்னிப்போ் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் வெங்கடேசன் (45). விவசாயி. இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த பங்களாகாரா் என்பவரது நிலத்தில் மணிலா பயிரிட்டாா். காட்டுப் பன்றிகளிடமிருந்து மணிலா செடிகளை பாதுகாப்பதற்காக சட்ட விரோதமாக மின்வேலி அமைக்கத் திட்டமிட்டாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், விவசாயி வெங்கடேசன், அதே கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் (35), முருகதாஸ் (40) ஆகியோா் செவ்வாய்க்கிழமை மாலை மணிலா பயிா்களைச் சுற்றிலும் மின்வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, எதிா்பாராத விதிமாக மின்சாரம் பாய்ந்ததில் வெங்கடேசன் உள்பட 3 பேரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும், இந்த விபத்தில் பலியானவர்களின்  குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக  முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments