தமிழ்நாடு

ஆளில்லாத விழாவில் முக்கால்மணி நேரம் பேசிய முன்னாள் அமைச்சர் (விடியோ)

DIN

ஆளில்லாத விழாவில் ஆளே இல்லாத இடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முக்கால்மணி நேரம் பேசியுள்ளார். 

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கீழஉரப்பனூர் கிராமத்தில் இந்திரா காலனி பகுதியில் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நாடக மேடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. 

விழாவிற்கு வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார், நாடக மேடையை திறந்துவைத்தார். 

அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் நாடக மேடையில் அமர்ந்தவாறு மக்களிடம் பேசத் தொடங்கினார். சுமார் 45 நிமிடங்கள் அவர் பேசிக்கொண்டு இருந்தார். ஆனால், அவர் பேச்சைக் கேட்க அங்கு நான்கு சிறுவர்களும் சில பெண்களும் மட்டுமே இருந்துள்ளனர். ஆளில்லாத விழாவில் ஆளே இல்லாத இடத்தில் முன்னாள் அமைச்சர் முக்கால் மணி நேரம் பேசியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT