தமிழ்நாடு

நெல்லையில் மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்!

நெல்லையில் மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக, பெற்ற மகனே மனைவியுடன் சேர்ந்து தாயை எரித்துக் கொன்றது அம்பலமாகியுள்ளது. 

DIN

நெல்லையில் மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக, பெற்ற மகனே மனைவியுடன் சேர்ந்து தாயை எரித்துக் கொன்றது அம்பலமாகியுள்ளது. 

திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகரை அடுத்த மங்கம்மாள் சாலை பகுதியில் வசிப்பவர் அண்ணாமலை (47) தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தாய் அரசம்மாள்(70) மகன் அண்ணாமலைக்கு திருமணம் முடிந்த நிலையில் அரசம்மாள் மகனின் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி மூதாட்டி அரசம்மாள் வீடு அருகே தீயில் கருகி நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை தாலுகா காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அண்ணாமலையிடம் விசாரித்தபோது குடும்ப பிரச்னையில் தனது தாய் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார். 

இருப்பினும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்பதால் தொடர்ந்து போலீசார் அவரிடம் துருவித் துருவி விசாரித்த போது அண்ணாமலை முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து விசாரித்த போது மூதாட்டி அரசம்மாளை மகன் அண்ணாமலை மற்றும் மருமகள் அனிதா இருவரும் சேர்ந்து தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. 

அதாவது குடும்ப பிரச்னை மற்றும் சொத்து பிரச்னை காரணமாக அண்ணாமலையின் மனைவி அணிதா அரசம்மாளை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டபோது கணவருடன் சேர்ந்து மாமியாரை தீர்த்து கட்ட அனிதா முடிவெடுத்துள்ளார். இருவரும் திட்டமிட்டபடி வீட்டில் கிடந்த விறகில் தீ வைத்து கடுகளவும் மனிதாபிமானமில்லாமல் வயதான மூதாட்டியான அரசம்மாளை தீக்குள் தள்ளி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

எனவே, தற்போது தாலுகா காவல்துறையினர் இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றி அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அனிதா இருவரையும் கைது செய்தனர். குடும்பப் பிரச்னையில் 70 வயது மூதட்டியை பெற்ற மகனே தனது மனைவியுடன் சேர்ந்து தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT