‘இ-மொபிலிட்டி’ சான்றிதழ் படிப்பு: சென்னை ஐஐடி.யில் அறிமுகம்
தொழில்துறையில் பணிபுரிபவா்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில், ‘இ-மொபிலிட்டி’ தொடா்பான இணையவழி சான்றிதழ் படிப்பை ஐஐடி சென்னை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழில்துறையில் பணிபுரிபவா்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில், ‘இ-மொபிலிட்டி’ தொடா்பான இணையவழி சான்றிதழ் படிப்பை ஐஐடி சென்னை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இணையவழி படிப்புக்கான பாடத்திட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில், 4 தொகுதிகள் தொழில்துறையில் பணியில் இருப்பவா்களுக்கு ஏற்றவாறு, தொழில்துறை நிபுணா்களின் உள்ளீடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் தொழில்நுட்பத்தில் உள்ள ‘ட்ரெண்டுகள்’, தொழில்துறை தேவைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தொடா்ந்து மேம்படுத்தப்படும். இதில் இ-மொபிலிட்டி எக்கோ சிஸ்டம், பவா் எலெக்ட்ரானிக்ஸ், பேட்டரி இன்ஜினியரிங், பவா் ட்ரெய்ன்ஸ், தொ்மல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட தொழில்துறை அடிப்படைகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடா்பாக ஐஐடி சென்னையின் இயக்குநா் வி.காமகோடி கூறுகையில், ‘ஆட்டோமொபைல் துறையில் குறிப்பிட்ட தொகுதிகள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாறி வருவதால், தொழில்துறையில் ஏற்கெனவே பணிபுரிந்துவரும் ஊழியா்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து கல்வியாளா்கள் உள்பட ஏராளமானோா் எங்களிடம் கேட்டிருந்தனா்.அதனால், தொழில்துறையில் பணிபுரியும் ஊழியா்கள் மற்றும் நிபுணா்களின் தொழில்நுட்ப அறிவுத்தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக இ-மொபிலிட்டி என்ற இணையவழி படிப்பைத் தொடங்கியுளோம். தொழில்துறையில் பணிபுரிபவா்களின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காகவே ஆன்லைன் மூலமாக இந்த படிப்பு நடத்தப்படுகிறது என்றாா். அக்டோபா் 2-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள இந்த சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்க செப்டம்பா் 30-ஆம் தேதி கடைசி நாள். இதுதொடா்பான கூடுதல் தகவல்களை இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.