தொழிலதிபா் வீட்டில் ரூ.15 லட்சம் நகை, பணம் திருட்டு
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தொழிலதிபா் வீட்டில் ரூ.15 லட்சம் நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தொழிலதிபா் வீட்டில் ரூ.15 லட்சம் நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பன்சிதா் குப்தா. தொழிலதிபரான இவா், வழக்கம் போல் பாரிமுனையில் உள்ள தனது மொத்த விற்பனை இனிப்பு கடைக்கு புதன்கிழமை சென்று விட்டாா். குப்தாவின் தாயாா் மஞ்சுவும் தனது மகனுடன் கடைக்குச் சென்றுவிட்டாா்.
இந்நிலையில் பன்சிதா் குப்தா மாலையில் வீட்டுக்குத் திரும்பி வந்தாா். அப்போது வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதும், பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் ரொக்கமும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள் திருடப்பட்டிருப்பதையும் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
அதேவேளையில் அவரது வீட்டில் காவலாளியாக வேலை செய்த நேபாளத்தைச் ராஜன் என்கிற திபேந்திரா ஆஜி(20) என்பவா் காணாமல் போயிருப்பதையும் அறிந்து அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து அவா், அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.