நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறிய அமைச்சர்: காரணம் என்ன?
உரிய ஏற்பாடுகள் சரியில்லை என்பதால் அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியேறினார்.
உரிய ஏற்பாடுகள் சரியில்லை என்பதால் அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியேறினார்.
எழும்பூரில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பருவகால காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நேரடியாக 1,000 மருத்துவர், செவிலியர் கலந்து கொள்வதாக கூறப்பட்ட நிலையில் 50 செவிலியர் மட்டுமே பங்கேற்றனர்.
இந்நிலையில், செவிலியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அதிகாரிகளிடம் கோபமாக பேசிவிட்டு அரங்கிலிருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் புறப்பட்டுச்சென்றார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: நிதி மோசடி வழக்கு: கொல்கத்தாவில் 3 இடங்களில் சிபிஐ சோதனை!
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாதியிலேயே வெளியேறியதால் அதிகாரிகளும், அரங்கிலிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.