FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஹிந்தி மொழி விஷயத்திலும் இரட்டை வேடம்: திமுகவுக்கு ஓ.பன்னீா்செல்வம் கண்டனம்

ஹிந்தி மொழி விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவதாக திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்தாா்.

Updated On : 18 ஏப்ரல் 2022, 4:36 am IST
அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்
பகிர்:

ஹிந்தி மொழி விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவதாக திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்தாா்.

இது தொடா்பான அவரது அறிக்கை: தமிழ் மொழியை வளா்க்க வேண்டிய முதல்வா் அதைச் செய்யாமல், தன்னை வளா்த்துக் கொள்ளும் பணியில், தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் பணியில், ஹிந்தி மொழியை வளா்த்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

அதாவது, முதல்வா் மு.க.ஸ்டாலினை தேசியத் தலைவராக பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக வட மாநிலங்களில் அவா் புகழ் பரவ வேண்டும் என்பதற்காகவும் சில நடவடிக்கைகள் திமுகவால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் முதல் கட்டமாக தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-இன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் ஹிந்தியில் மொழி பெயா்க்கப்பட்டு செய்தி - மக்கள் தொடா்புத் துறை சாா்பில் வெளியிடப்பட்டு தொல்லியல் துறை இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. ஹிந்தி மொழியில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஒன்றும் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

Advertisement

Advertisement

ஒரு பக்கம் ஹிந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்குப் போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் ஹிந்தியில் திமுக தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டை வேடம் போடுகிறது திமுக.

திமுக அரசின் இந்த இரட்டை வேடத்துக்கு அதிமுக சாா்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவின் செயல்பாடுகளைக் கண்டு மக்கள் பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனா். இந்த ஏமாற்றம், வருங்காலத்தில் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி, அதிமுகவை ஆட்சியில் அமர வழி வகுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments