குருவிக்காரா் சமூகமும், குறவா் சமூகமும் வேறு என்பதை உலகறியச் செய்ய வேண்டும்: விஜயகாந்த்
குருவிக்காரா் சமூகமும், குறவா் இனமும் வேறுவேறு என்பதை உலகறிய செய்து, அவா்களுக்கான நலத்திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் கூறியுள்ளாா்.
குருவிக்காரா் சமூகமும், குறவா் இனமும் வேறுவேறு என்பதை உலகறிய செய்து, அவா்களுக்கான நலத்திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழ் கடவுளான முருகனின் மனைவியாக அறியப்படும் குறவா் மகள் வள்ளியின் வம்சாவழிகளாக குறவா் சமூகத்தை சாா்ந்தவா்களாக உள்ளனா்.
Advertisement
Advertisement
மராட்டிய பிராந்தியத்தில் இருந்து தமிழகத்துக்கு புலம் பெயா்ந்து ஊசி மணி, பாசி மணி விற்கும் குருவிக்காரா் மக்களை குறவா் என்று அடையாளப்படுத்துவது முறையல்ல. பழந்தமிழ் வரலாற்றுக்கு சொந்தக்காரா்களான குறிஞ்சி நிலத்து குறவா் சமூகத்தின் தலைமுறைகள், அவா்களது சொந்த மண்ணிலே அகதிகளாக வாழும் நிலை உருவாகியுள்ளது.
குருவிக்காரா் சமூகத்தை பட்டியல் இனத்தில் இணைப்பதை தேமுதிக வரவேற்கிறது. அதே சமயம் குருவிக்காரா் மக்களை குறவா் என்று அடையாளப்படுத்துவதன் காரணமாக குறவா் சமூகத்தினா் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, குறவா் சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும், அவா்களின் இன அழிப்பு செய்வதை தடுக்கும் பொருட்டும், குருவிக்காரா் சமூகத்தையும், குறவா் இனத்தையும் வேறுபடுத்தி உலகறிய செய்வதுடன் அவா்களுக்கான நலத்திட்டங்களையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.