கடும் பனிமூட்டம்: தூத்துக்குடியில் விமான சேவை பாதிப்பு!
தூத்துக்குடியில் வியாழக்கிழமை கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வியாழக்கிழமை கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால், சென்னை விமான நிலையத்தில் காலை 6.20 மணிக்கு 39 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விமானம் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாமல் வானிலே சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
இதையும் படிக்க | ராகுலுடன் ஒற்றுமை நடைப்பயணத்தில் இணையும் சோனியா!
Advertisement
Advertisement
வானிலை சீராகாத காரணத்தால் அந்த விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. மேலும், வானிலை சீரான பின்னரே விமான சேவை சீரடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.