FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வைகோவிடம் நலம் விசாரித்தார் முதல்வர்

கரோனாவால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். 

Updated On : 21 பிப்ரவரி 2022, 9:11 pm IST
வைகோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்
பகிர்:

கரோனாவால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். 

சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோ வீட்டிற்குச் சென்ற மு.க.ஸ்டாலினுடன், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடந்த மாதம் 30ஆம் தேதி கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவரின் அறிவுரையின்படி வீட்டில் இருந்தவாறே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். 

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், சென்னை அண்ணா நகர் வீட்டில் இருந்தவாறே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், இன்று வைகோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்த முதல்வர், சிறிது நேரம் உரையாடிவிட்டு புறப்பட்டுச் சென்றார். 

உடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments