இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா
பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா உறுதியானதையடுத்து இயக்குநர் மணிரத்னம் சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரபு, ரகுமான், பாபு ஆண்டனி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: தி லெஜண்ட்: புதிய விடியோ பாடல் வெளியானது
பொன்னியின் செல்வன் பட வெளியீட்டு பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா தொற்று உறிதியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.