முகப்பு
தமிழ்நாடு

 பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை...!

 மே 18, 2022: பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

Updated On : 19 மே 2022, 3:37 am IST
பகிர்:

 மே 21, 1991: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் 15 பேர் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் இரவு 10.20 மணியளவில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை.
 ஜூன் 11, 1991: 19 வயதான ஏ.ஜி. பேரறிவாளனை சிபிஐ கைது செய்தது. அவர் மீது தடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு.
 ஜனவரி 28, 1998: நளினி, பேரறிவாளன் உள்பட 26 குற்றவாளிகளுக்கு தடா நீதிமன்றம் மரண தண்டனை விதிப்பு.
 மே 11, 1999: இந்த வழக்கில் முருகன் (எ) ஸ்ரீஹரன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
 ஏப்ரல், 2000: தமிழக அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையில் அப்போதைய தமிழக ஆளுநரால் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
 ஏப்ரல் 28, 2000: முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு அனுப்பிவைத்தது.
 ஆகஸ்ட் 12, 2011: பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். அதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 ஆகஸ்ட் 30, 2011: மூவரின் தூக்கு தண்டனையை குறைக்கக் கோரி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அரசில் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.
 மே 1, 2012: அந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம்
 மாற்றியது.
 பிப்ரவரி 18, 2014: பேரறிவாளன் உள்பட மூவரின் தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
 பிப்ரவரி 19, 2014: ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு.
 பிப்ரவரி, 2014: ஏழு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் தடை
 2015: அரசமைப்புச்சட்டப் பிரிவு 161-இன் கீழ் விடுதலை செய்யக் கோரி தமிழக ஆளுநரிடம் பேரறிவாளன் கருணை மனு தாக்கல். பின்னர், ஆளுநரிடம் இருந்து பதில் வராததால் உச்சநீதிமன்றத்தில் அவரது தரப்பில் வழக்கு.
 ஆகஸ்ட், 2017: பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோல் வழங்கல்.
 செப்டம்பர் 9, 2018: அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரை.
 மார்ச் 9, 2022: பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கல்.
 மே 11, 2022: பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிந்தது.
 மே 18, 2022: பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments