முகப்பு
தமிழ்நாடு

ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு திமுக கடிதம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் அனுப்ப திமுக முடிவெடுத்துள்ளது.

Updated On : 2 நவம்பர் 2022, 1:36 pm IST
அண்ணா அறிவாலயம் (கோப்புப்படம்)
பகிர்:

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் அனுப்ப திமுக முடிவெடுத்துள்ளது.

தமிழக அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து தமிழக அரசை விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

அவர் வெளியிட்ட அறிவிப்பில், திமுக மற்றும் ஒற்றைக் கருதுடைய கட்சிகள் நாளைக்குள் திமுக அலுவலகத்திற்கு வந்து ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் கையெழுத்திட அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments