ஒரே பயணச்சீட்டு: முதல்வர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது
சென்னையில் ஒரே பயணச்சீட்டில் பேருந்து, ரயில்களின் பயணம் செய்யும் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னையில் ஒரே பயணச்சீட்டில் பேருந்து, ரயில்களின் பயணம் செய்யும் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து பணிக்கு வந்து செல்வோருக்கு ஏதுவாக மாநகரப் பேருந்துகள், புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களின் ஒரே பயணச்சீட்டில் பயணம் செய்யும் வசதியை ஏற்படுத்த கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், ஒரே பயணச்சீட்டு திட்டம் குறித்து பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதையும் படிக்க | பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோவில் பயணிக்க ஒரே டிக்கெட்
மாநகரப் போக்குவரத்து கழகம், மெட்ரோ நிர்வாகம் மற்றும் தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தை இணைத்து கடந்த 2010ஆம் ஆண்டு பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் உருவாக்கப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் கூட்டம் முதல்முறையாக கூடியுள்ளது.