உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு தடை: அரசிதழ் வெளியீடு
உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு (Smoking Room) தடை விதித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு (Smoking Room) தடை விதித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைக்குழல் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிய நிலையில், தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சாராயம், மதுபானம் ஆகிய கடைகளை தவிர்த்து புகைக்குழல் கூடம் எங்கும் திறக்கக்கூடாது என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அரசின் விதிமுறைகளை மீறியிருந்தால் புகைக்குழல் கூடத்தில் உள்ள பொருட்கள் பறிமுதல் செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது.
மேலும், விதிகளை மீறி புகைக்குழல் கூடம் நடத்தினால் ஓராண்டு முதல் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும், ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.