முகப்பு
தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை: முதல்வர் ஆலோசனை தொடக்கம்!

மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Updated On : 4 ஆகஸ்ட் 2023, 11:49 am IST
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படங்கள்)
பகிர்:


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. 

மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் தொடர்பாக ஏற்கெனவே 5 கட்டங்களாக ஆய்வுக் கூட்டங்கள் ந்டந்த நிலையில், மீண்டும் தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

Advertisement

Advertisement

அரசின் திட்டங்கள், அதன் செயல்பாடுகள், தாமதத்துக்காக காரணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசகைக் கூட்டத்தில் ஆய்வுசெய்யப்படுவதாகத் தெரிகிறது. 

இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.