மகளிர் உரிமைத்தொகை: முதல்வர் ஆலோசனை தொடக்கம்!
மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.
மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் தொடர்பாக ஏற்கெனவே 5 கட்டங்களாக ஆய்வுக் கூட்டங்கள் ந்டந்த நிலையில், மீண்டும் தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
அரசின் திட்டங்கள், அதன் செயல்பாடுகள், தாமதத்துக்காக காரணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசகைக் கூட்டத்தில் ஆய்வுசெய்யப்படுவதாகத் தெரிகிறது.
இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.