தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு
தென்காசி மாவட்டத்தில் 8 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 8 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சிவகிரி அருகே பச்சேரி கிராமத்தில் ஆக.20 ஆம் தேதி ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக இன்று முதல் ஆக.21 காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
சிவகிரி அருகே நெற்கட்டும்செவல் பகுதியில் பூலித்தேவரின் 308வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக ஆக.30 மாலை 6 மணி முதல் செ.2 காலை 10 மணி வரை144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.