முகப்பு
தமிழ்நாடு

வாழப்பாடி பகுதியில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

Updated On : 5 பிப்ரவரி 2023, 9:29 am IST
வாழப்பாடி அருகே பழனியாபுரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை, சாலை தெரியாத அளவிற்கு காணப்பட்ட மூடுபனி.
பகிர்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. காலை 7.30 மணி வரை தொடரும் மூடுபனியால் வாகனங்கள் முகப்பு விளக்குடன் ஊர்ந்து செல்கின்றன.

வாழப்பாடி பகுதியில் 2022 இறுதிவரை பரவலாக பருவமழை பெய்தது. 2023 ஜனவரி மாதம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. தற்போது  பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையிலும், பனிப்பொழிவு குறையவில்லை. கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு மட்டுமின்றி, மூடுபனியும் படர்ந்து வருகிறது.

இதனால், காலை 7.30 மணி வரை வானம் சூரிய வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்கின்றன. 

Advertisement

Advertisement

அதிகாலையில் மட்டுமின்றி, காலை 9 மணி வரை தொடரும்  மூடுபனியால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ - மாணவியரும், வேலைக்கு செல்வோரும் குறித்த நேரத்திற்குள் எழுந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாவதாகவும், இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களும், கடும் பனிப்பொழிவால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளும் வேதனை தெரிவித்துள்ளனர்.

திடீரென வாழப்பாடி பகுதியில் இன்று காலை 9 மணி வரை ஏற்பட்ட மூடுபனியால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments