தமிழ்நாடு

ஏடிஎம் கொள்ளை: இருவருக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல்!

ஏடிஎம் கொள்ளை வழக்கில், ஹரியாணாவைச் சேர்ந்த இருவருக்கும் மார்ச் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

DIN

ஏடிஎம் கொள்ளை வழக்கில், ஹரியாணாவைச் சேர்ந்த இருவருக்கும் மார்ச் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடித்த 2 பேரும் வேலூர் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூா் பகுதிகளில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை புகுந்த மா்ம கும்பல், பணம் வழங்கும் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சத்தை திருடிச் சென்றது.

இதில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆந்திரம், கா்நாடகம், ஹரியாணா மாநிலங்களில் தனிப்படை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய இருவரை நேற்று இரவு காவல் துறையினர் ஹரியாணாவில் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் காவல் துறையினர் விமானம் மூலம் தமிழகம் அழைத்து வந்தனர்.

இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பு இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி இருவரையும் மார்ச் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"பராசக்தி" படப்பிடிப்பு நிறைவு! கொண்டாடிய படக்குழு! | SK | Sudha Kongara

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

குறைந்த வட்டி, உடனடி கடன்! Online Scam-ல் மாட்டிக்காதீங்க! | Cyber Scams | Online Shield

கர்பா குயின்... அனன்யா!

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பந்துவீச்சு!

SCROLL FOR NEXT