முகப்பு
தமிழ்நாடு

விஜயபாஸ்கரின் காளை கருப்புக் கொம்பன் மறைவு!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளையான கருப்புக் கொம்பன் இன்று காலை உயிரிழந்தது.

Updated On : 4 மே 2023, 8:44 am IST
பகிர்:

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளையான கருப்புக் கொம்பன் இன்று காலை உயிரிழந்தது.

முன்னாள் மக்கள் நல்வாழ்த்து துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு ஆர்வலர். இவர் பல காளைகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பது வழக்கம்.

அந்த வகையில் வடசேரிபட்டியில் கடந்த 2-ஆம் தேதி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், வாடிவாசலலில் இருந்து அவரது கருப்புக் கொம்பன் காளை வெளிவரும் போது முன்னால் இருந்த கம்பத்தில் முட்டி மயங்கியது. இதனை தொடர்ந்து ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் உயிரிழந்தது.

Advertisement

Advertisement

இவர் வளர்த்து வந்த கொம்பன் காளை, ஏற்கெனவே திருநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதேபோல் வாடிவாசல் கம்பத்தில் முட்டி உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.