நாளைமுதல் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்!
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளைமுதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளைமுதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளை காலை 11 முதல் 13 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகலுக்கு ரூ.275யும், மறுகூட்டலுக்கு ரூ.205யும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரு.300 கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் தேர்வுகள் திங்கள்கிழமை(மே 8) வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 8,36, 593 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களது தேர்வு முடிவுகள் இன்று திங்கள்கிழமை வெளியானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.