FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நாளைமுதல் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளைமுதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 மே 2023, 2:04 pm IST
கோப்புப்படம்
பகிர்:

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளைமுதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளை காலை 11 முதல் 13 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகலுக்கு ரூ.275யும், மறுகூட்டலுக்கு ரூ.205யும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரு.300 கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் தேர்வுகள் திங்கள்கிழமை(மே 8) வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 8,36, 593 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களது தேர்வு முடிவுகள் இன்று திங்கள்கிழமை வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments