FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஒரு பேரே வரலாறு... ஃபிஃபா வெளியிட்ட மெஸ்ஸி போஸ்டரில் விஜய் பட வசனம்!

ஜன நாயகன் படத்தின் வசனத்தில் ஃபிஃபா வெளியிட்ட போஸ்டர் குறித்து...

Updated On : 16 ஜூலை 2026, 4:27 pm IST
இங்கிலாந்து முதல் கோல் அடித்ததும் வேடிக்கைப் பார்க்கும் மெஸ்ஸி. - படம்: ஏபி
பகிர்:

ஆர்ஜென்டீன அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு ஃபிஃபா தமிழில் ஜன நாயகன் படத்தின் வசனத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளது.

நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் 2 அசிஸ்ட்டுகளைச் செய்த மெஸ்ஸிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதுவரை இந்த உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 5 முறை மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

ஃபிஃபா உலகக் கோப்பை தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி தமிழ் மொழியிலும் தமிழ்ப் படத்தின் பெயர்களை, வசனங்களைப் பயன்படுத்தி போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றன.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இரண்டாவது கோல் அடித்தபோது, லொடாரோ மார்டினெஸை மெஸ்ஸி கட்டியணைக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “ஒரு பேரே வரலாறு” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஜன நாயகன் படத்தில் பாடலாசரியர் விவேக் எழுதிய இந்தப் பாடல் வரிகள் ஃபிஃபா வரைக்கும் சென்று பிரபலமாகியுள்ளது. இந்தப் பதிவில் விஜய் ரசிகர்கள் ”எங்கும் தளபதிதான்” எனக் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மெஸ்ஸிக்கான சிறப்புப் போஸ்டர். - படம்: இன்ஸ்டா / ஃபிஃபா உலகக் கோப்பை.
summary

A name that is history itself... A dialogue from a Vijay movie features in the Messi poster released by FIFA!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments