FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் பொதுமக்களை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று!

சென்னையில் பொதுமக்களை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. 

Updated On : 24 நவம்பர் 2023, 11:37 am IST
தெரு நாய்கள்.. கோப்பிலிருந்து..
பகிர்:


சென்னை: சென்னையில் பொதுமக்களை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. 

சென்னை ராயபுரத்தில் தெருநாய் ஒன்று பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என 28 பேரை கடித்துள்ளது. இந்த நிலையில் அந்த நாயை கல்லால் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இறந்த நாயின் உடலை உடல்கூறாய்வு செய்ததில், ரேபிஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

இதைடுத்து நாய் கடித்த 28 பேருக்கும் 5 தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ளுமாறு கால்நடை மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் பணியினை தீவிரப்படுத்துமாறு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடப்பாண்டில் இதுவரை 17,813 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments