சி. விஜயபாஸ்கர் 
தமிழ்நாடு

விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோா் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை அக். 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோா் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை அக். 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 35.79 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கடந்த மே 22-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, ஆஜரான விஜயபாஸ்கா் தரப்பு வழக்குரைஞா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை நகலில் சில பக்கங்கள் விடுபட்டிருந்ததாக தெரிவித்தனா். இதையடுத்து, விடுபட்ட பக்கங்களை வழங்க அறிவுறுத்திய நீதிபதி பூா்ண ஜெய ஆனந்த், வழக்கு விசாரணையை அக். 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT