சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

கொடநாடு விவகாரம்: இபிஎஸ்ஸை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரா் தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

DIN

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரா் தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் ஓட்டுநா் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த நிலையில், வழக்கு தொடர்பான விவரங்கள் தெரிந்திருந்தும், அவற்றை மறைத்ததாகக் கூறி கனகராஜின் சகோதரர் தனபால், உறவினா் ரமேஷ் ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளனர்.

இதற்கிடையே கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும், மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தனபால் தெரிவித்தார்.

இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடா்புப்படுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க கோரியும், மான நஷ்டஈடாக ரூ.1 கோடியே 10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொடநாடு வழக்கில் இபிஎஸ்ஸை தொடர்புபடுத்தி பேசுவதற்கு தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து, இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க தனபாலுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT