சென்னையில் பால் விநியோகம் முடங்கியது!
சென்னையில் பால் விநியோகம் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சென்னையில் பால் விநியோகம் முடங்கியுள்ளதாக மாநில முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வெள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணிகளில் மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் காலை 5 மணி நிலவரப்படி முகவர்களுக்கு எந்த நிறுவனத்திடம் இருந்தும் இன்னும் பால் வரவில்லை என்று பால் முகவர்கள் சங்கத் தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisement
இதனால் வழக்கம்போல் பால் விநியோகிப்பதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகின்றது.