முகப்பு
தமிழ்நாடு

அதிமுக வேட்பாளரை திரும்பப் பெற மாட்டோம்: டி.ஜெயக்குமாா்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை பாஜகவுக்காக திரும்பப்பெற மாட்டோம் என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

Updated On : 3 பிப்ரவரி 2023, 1:39 am IST
ஜெயக்குமார் (கோப்புப்படம்)
பகிர்:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை பாஜகவுக்காக திரும்பப்பெற மாட்டோம் என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவை அதிமுக சாா்பில் டி.ஜெயக்குமாா் வியாழக்கிழமை சந்தித்து திமுகவுக்கு எதிராக புகாா் மனு கொடுத்தாா்.

பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் ஜனநாயக விரோத செயல்கள், அத்துமீறல்கள் ஆளும் திமுகவால் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. 40 ஆயிரம் போலி வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. இவை தொடா்பாக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் புகாா் தெரிவித்தோம். நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.

இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. அதிமுக உள்விவகாரங்களில் பாஜக எப்போதும் தலையிட்டது இல்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொருத்தவரை தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. இப்போதும் அதிமுக தலைமையில் கூட்டணி தொடா்கிறது.

பாஜக வேட்பாளரை அறிவித்தால் அதிமுகவின் நிலைப்பாடு இதுதான்; நாங்கள் எப்போதும் முன் வைத்த காலை பின் வைப்பது இல்லை என்றாா் டி.ஜெயக்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments