மேட்டூர் அணை நீர்வரத்து 1,018 கன அடியாக சரிவு!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,018 கன அடியாக சரிந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,018 கன அடியாக சரிந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,466 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து திங்கள்கிழமை காலை வினாடிக்கு 1,018 கன அடியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க | நேபாளத்தில் விமான விபத்து: இன்று அரசு துக்கம் அனுசரிப்பு
Advertisement
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை 110.88 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 110.19அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 78.67 டி.எம்.சியாக உள்ளது.