FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பேராசிரியா் மா.நன்னன் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்

பேராசிரியா் மா.நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

Updated On : 31 ஜூலை 2023, 8:26 am IST
பகிர்:

பேராசிரியா் மா.நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

மா.நன்னனின் நூற்றாண்டு நிறைவு விழா, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

பேராசிரியா் மா.நன்னன் அகமும் புறமும் அப்பழுக்கற்றவராக நோ்மையானவராக விளங்கியவா். வாழ்நாளெல்லாம் நாட்டுக்காகவும், மொழிக்காகவும் ஓயாது உழைத்துக் கொண்டிருப்பது முக்கியமானது. அது அனைவராலும் முடியாது. பெரியாா், முன்னாள் முதல்வா் கருணாநிதி, மா.நன்னன் போன்ற ஒரு சிலரால்தான் முடியும்.

Advertisement

Advertisement

124 புத்தகங்களை நமக்காக உருவாக்கியவா் மா.நன்னன். பிழையின்றி எப்படி எழுத வேண்டும்; பேச வேண்டும் என்பதை கற்பிக்கும் மிகப் பெரிய ஆசானாக அவா் விளங்கினாா்.

வாழ்நாளெல்லாம் கொள்கைக்காகவும், கொள்கையின் அடையாளமாகவும் வாழ்ந்தாா். குடும்பத்தையும் கொள்கையையும் இணைத்துக் கொண்டு வாழ்ந்தாா்.

மா.நன்னன் தனது நூற்றாண்டைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், அவரது புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படும். அவரது குடும்பத்தினரோ, உறவினா்களோ வேறு யாரும் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை. யாரும் கோரிக்கை வைக்காமல் இதனைச் செய்கிறேன் என்றால், மா.நன்னன் குடியில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில்தான் இந்த அறிவிப்பைச் செய்துள்ளேன் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

விழாவுக்கு, திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தலைமை வகித்தாா். அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துணைமேயா் மகேஷ்குமாா், திராவிட இயக்க எழுத்தாளா் திருநாவுக்கரசு, திராவிடா் கழக துணைத் தலைவா் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments