சென்னை, புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை!
சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் இன்று (ஜூன் 18) காலைமுதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை, தேனாம்பேட்டை, பெரம்பூர், சூளைமேடு, கோயம்பேடு, நெற்குன்றம், அரும்பாக்கம், அமைந்தகரை, விருகம்பாக்கம், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
படிக்க | அடுத்த 2 மணிநேரத்தில் இங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு!
Advertisement
இதேபோன்று புறநகர்ப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், எண்ணூர், பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தெற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.