முகப்பு
தமிழ்நாடு

நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்

சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் இரவு 10 மணிக்கு சென்னை திரும்புகிறார். 

Updated On : 29 மே 2023, 1:44 pm IST
பகிர்:

சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் இரவு 10 மணிக்கு சென்னை திரும்புகிறார். 

வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்குமாறு வெளிநாடுகளில் உள்ள முதலீட்டாளர்களை சந்தித்து முதல்வர் அழைப்பு விடுத்து வருகிறார். 

அந்த வகையில் அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23ஆம் தேதி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் உள்ள தொழிலதிபர்களை சந்தித்து முதல்வர் அழைப்பு விடுத்தார். 

Advertisement

Advertisement

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் இரவு 10 மணிக்கு சென்னை திரும்புகிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments