தொடர் மழை: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியை எட்டுகிறது!
தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தண்ணீர் வரத்து உள்ளதால் நீர்மட்டம் 130 அடியை எட்டி வருகிறது.
கம்பம்: தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தண்ணீர் வரத்து உள்ளதால் நீர்மட்டம் 130 அடியை எட்டி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது, அதன்காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
வியாழக்கிழமை அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2,230 கன அடியாக இருந்தது, வெள்ளிக்கிழமை வினாடிக்கு 1,853 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு மிக குறைந்த அளவான 105 கன அடியாக இருந்தது.
Advertisement
Advertisement
நீர் வரத்து அதிகமாகவும், நீர் வெளியேற்றம் குறைவாகவும் இருப்பதால் அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
இதையும் படிக்க | அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
வியாழக்கிழமை 128.40 அடியாக இருந்த நீர்மட்டம், வெள்ளிக்கிழமை 129.10 அடியாக உயர்ந்தது.
இதுகுறித்து அணையின் பொறியாளர் ஒருவர் கூறும்போது, அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் 130 அடியை எட்டி வருகிறது, வரும் நாள்களில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
அணை நிலவரம்
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 129.10 அடி (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 4,503.50 மில்லியன் கன அடி, நீர் வரத்து வினாடிக்கு 1,853 கன அடி, தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 105 கன அடியாக உள்ளது. நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 2.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 3.8 மி.மீட்டர் மழையும் பெய்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.