தாயார் ஆண்டாளுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் பெருமாள் 
தமிழ்நாடு

கூடலூரில் ஆண்டாள் சமேத பெருமாளுக்கு திருக்கல்யாணம்

தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள ஸ்ரீ கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடார வெள்ளியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN


கம்பம்: தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள ஸ்ரீ கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடார வெள்ளியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூடலூரில் மிகப்பழமையானதும், புராதான மிக்கதுமானது ஸ்ரீ கூடலழகியபெருமாள் கோயில். இங்கு தாயார் ஆண்டாளுடன் தம்பதி சமேதராக பெருமாள் அருள்பாலித்து வருகிறார்.

ஆண்டிற்கு ஒருமுறை அபிஷேகம்
மார்கழி 27 -ஆம் வெள்ளிக்கிழமை கூடார வெள்ளியை முன்னிட்டு அதிகாலை முதலே பெண் பக்தர்கள் திரண்டனர். திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் முடிந்தவுடன் கோயில் மூலவராக உள்ள கூடலழகிய பெருமாளுக்கு ஆண்டிற்கு ஒருமுறை அபிஷேகம் என்ற ஆகமவிதிப்படி வெள்ளிக்கிழமை அபிஷேகம் நடைபெற்றது.

அதன் பின்னர் உற்சவ மூர்த்திகளான ஆண்டாள் சமேத பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று பூணூல் அணிவிக்கப்பட்டது.

திருக்கல்யாணத்தின் போது கேட்டவரம் தரும் தாயார் ஆண்டாள் சமேத பெருமாளிடம் ஆண், பெண் பக்தர்கள் ஏராளமான கோரிக்கைகளை வைத்து வழிபாடு செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக - தவெக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் | TVK-BJP alliance

2025-ல் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு: 28 பேர் பலி

திரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரெஜினா கேசண்ட்ராவுக்கு குவியும் வாழ்த்துகள்!

அறிமுகமான நாளில் எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பங்குகள் 1% உயர்வு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை | செய்திகள்: சில வரிகளில் | 18.11.25

SCROLL FOR NEXT