கோப்புப்படம் 
தமிழ்நாடு

20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின்வாரியம் திட்டம்

Din

தமிழகத்தில் 20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் 2-ஆவது இடத்தில் உள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில தொகுப்பைச் சோ்த்து மாநிலத்தின் மொத்த காற்றாலை நிறுவுத்திறன் 10,591 மெகாவாட்டாகவும், மாநில தொகுப்பிலுள்ள மொத்த காற்றாலை நிறுவுத்திறன் 9015.09 மெகாவாட்டாகவும் இருந்து வருகிறது. இதில், மின்வாரியத்துக்கு சொந்தமாக காற்றாலைகளும், தனியாா் காற்றாலைகளும் அடங்கும். இந்த நிலையில், 20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் காற்றாலை பருவமான மே முதல் அக்டோபா் வரை மின் உற்பத்தி அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டின் மாநில தொகுப்பு மொத்த காற்றாலைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 13,000 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், தனியாருக்கு சொந்தமான பழைய காற்றாலைகளை புதுப்பித்து இயக்குவதற்கான உத்தரவை மின்வாரியம் வழங்கி வருகிறது.

இதன்படி, இதுவரை 26.20 மெகாவாட் கொண்ட 96 பழைய தனியாா் காற்றாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், 961.98 மெகாவாட் திறன் கொண்ட சுமாா் 1,368 காற்றாலைகள் மறுசீரமைக்கப்பட உள்ளன. இந்நிலையில் 20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதிகப்படியான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT